27 March 2013

டாக்டர்.சம்பத்குமார்




நல்ல அதிகாரியாக இருப்பதும் நல்ல மனிதராக இருப்பதும் நல்ல நிர்வாகியாக இருப்பதும் அவ்வளவு எளிதல்ல .எல்லாம் ஒருங்கினைந்த ஓர் மனிதர்,தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சுகாதார மாவட்டத்தையே வழிநடத்திய ஆசான்,எனது ஆதர்ச புருஷர்.டாக்டர்.சம்பத்குமார் இந்தமாதம் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.ஒவ்வோரு ஆய்வுக் கூட்டத்திலும் இவர் கையாண்ட எளிமையான நேரடியான அனுகுமுறை அனைவரையும் கவர்ந்தது.யாரையும் மனம் புன்படும் படி கடிந்ததில்லை.இனி வரும் காலங்களில் இது போன்ற அதிகாரிகளை காண்பது அரிதாக இருக்கும்.போய் வாருங்கள் சார்.உங்களிடம் கற்றுக் கொண்ட பணியும்,அன்பும்,எங்களை வழிநடத்தும்.





No comments: