01 December 2012

Special Polio camp for Migrant children

ஒரு குழந்தை கூட போலியோ சொட்டு மருந்து போடாமல் விடுபடக் 
கூடாது என்பதற்காக,22.12.2012 அன்று இடம் பெயர் குழந்தைகளுக்கான சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் (Special Polio camp for Migrant children ) நடைபெற உள்ளது.பொது சுகாதாரத்துறையினரின் கடின உழைப்பின் பேரில் போலியோ இல்லாத நாடாக இந்தியா மிளிரும் நாள் தொலைவில் இல்லை. மாறாக நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பற்றி தெரிய வரக் கூடிய தகவல் அபாயகரமாக இருக்கிறது.


நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் போலியோ நோய்கெதிரான தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று நிரூபித்தால் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உலகளவில் போலியோ நோயை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த மூன்று நாடுகளில் போலியோ ஒரு கொள்ளை நோயாக உள்ளது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச அளவில் போலியோ ஒழிப்பை கண்காணிக்கும் அமைப்பானகுளோபல் போலியோ எராடிகேஷன் இம்மூன்று நாடுகளில் இருந்தும் யாராவது ஒருவர் பயணம் மேற்கொண்டால், அதன் மூலம் போலியோ கிருமி ஏற்றுமதியாகு அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இனி, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் எல்லையை கடக்கும் முன்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.




1 comment:

மதுரை சரவணன் said...

ungkal karuththukkal arumai.. thakavakkal mikavum payanullathaaka ullana..vaalththukkal.