31 December 2012

ஆர்.பொன்மேனி கிராம சுகாதார செவிலியர்

தாமதமான பதிவு. புகைப்படங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாம்தம் காரணம்.தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின்கீழ் உள்ள சேப்ப்ளாபட்டி ஆரம்ப சுகாதார நிலைய்த்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து 30.09.2012 அன்று பணி ஓய்வு பெற்ற திருமதி.ஆர்.பொன்மேனி அவர்களுக்கு 30.09.2012 அன்று பிரிவு உபசார விழா தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.அவரின் பணித்திறமை மற்றும் நேர்த்தி பற்றி அனைவரும் பேசினர்.இறுதியில் ஏற்புரையாக பேசிய திருமதி.ஆர்.பொன்மேனி அவர்கள் தனது வெற்றிக்கான காரணங்களை விளக்கிப் பேசினார்.நான் எங்கு பணிபுரிந்தாலும் அவ்வூர் மக்களுடன் இரண்டரக் கலந்து விடுவேன்.எல்லோர் வீட்டு நல்லது கெட்டதுகளும் எனக்குத் தெரியும்.ஒவ்வொரு வீட்டுப் பெண்களையும் பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு பரிச்சயம் செய்துகொள்வேன் என கூறினார்.















No comments: