26 October 2012

டெங்கு களப்பணி அனுபவங்கள்

டெங்கு தொடர்பான களப்பணியில் இருந்த நண்பர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது சில தகவல்களை பகிந்து கொண்டார்கள்.எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்,

                1.ஒரு வீட்டில் சிமெண்ட் தொட்டி நிறைய நீர்பிடித்து ஸ்டோர் செய்து வைத்திருந்தார்களாம். தொட்டி நிறைய ஏராளமான கொசுப் புழுக்கள்.டாக்டர் சதீஷ்குமாரும் என்.எம்.எஸ்.திரு.மனோகரன் அவர்களும் நீரை காலிசெய்யும்படி வீட்டு பெண்மணியிடம் கூறினார்களாம்.இந்த புழுக்கள் எல்லாம் இன்னும் ஒரு வாரத்திற்குள் கொசுக்களாகிவிடும் என எடுத்துச் சொல்லியும் அந்த பெண்மணி தொட்டியை காலி செய்ய அனுமதிக்கவில்லை.அதோடில்லாமல் சொந்த பந்தங்களை எல்லாம் கூட்டி ரகளையே செய்துவிட்டார்களாம்.ஒருவழியாக எதிர்ப்பையும் மீறி தொட்டியை காலிசெய்துவிட்டு வர பெரும் பாடு ஆகிவிட்டதாம்.

            2. படித்த நடுத்தர மக்களிடையே கூட விழிப்புணர்வு இல்லாதது தெரிய வருகிறது. கொலு வைத்திருந்த ஒரு விட்டில் 10 நாட்களாக பார்க் செய்து குளம் செட் வைத்திருந்தார்கள். தினமும் நீரை மாற்றாமல் இருந்ததால் குளம் நிறைய கொசுப்புழுக்கள். எடுத்துச் சொன்னபிறகு அதனைக் காலி செய்தார்கள்.

           3.நீர் தேங்கியிருந்த ஒரு வீட்டுத் தொட்டியில் மருந்தினை ஊற்றிய ஒரு மஸ்தூரை வீட்டுக் காரர் சரமாரியாக திட்டியுள்ளார்.எடுத்துச் சொல்லி புரியவைக்க பெரும்பாடு பட்டுப் போனார்களாம்.

            4.எல்லா இடத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததில் பள்ளி மாணவர்களிடம் செய்யப் பட்ட பிரச்சாரம் தான் மிகுந்த பயனளிப்பதாக இருக்கிறதாம்.வீட்டை சுற்றி யுள்ள பிளாஸ்டிக் கப்,தேங்காய் சிரட்டை இவைகளை அப்புறப்படுத்துவதில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மாணவர்களின் பங்கு அதிகமாக இருக்கிறதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனராம்.

No comments: