15 June 2012

திருமதி.ஆர்.ஜெயலட்சுமி பணி ஓய்வு

தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சேப்ளாப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் சிறப்புநிலை கிராம சுகாதார செவிலியராகப் பணிபுரிந்து 30.04.2012 அன்று வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்ற திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்களுக்கு தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சார்பாக பிரிவு உபசாரவிழா நடைபெற்றது.

விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் திரு.சா.பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்றார்.மரு.மணிமேகலை,மரு.நிருபா,மரு.சுதாகர் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்களின் குடும்பத்தினரும் விழாவில் கல்ந்து கொண்டனர்.முன்னதாக திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்கள் நல்லதொரு சைவ விருந்து படைத்தார்.விழாவிற்கு பிறகு உரிய மரியாதைகளுடன் அவரது இல்லத்திற்கு அரசு வாகனத்தில் கொண்டு விட்டு வந்தோம்.

இவரது பணிக்காலத்திற்குள் பகுதி சுகாதார செவிலியராக பதவி உயர்வு பெற்றுவிட வேண்டும் என்கிற இவரது கனவு கனவாகவே போய்விட்டது தான் வருத்தமான ஒன்று.மாநில அளவில் நிறைய பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் இவ்வாறு ஒரே பதவியில் இறுதி வரை பணியாற்றி ஓய்வு பெறும் அவலம் இனியும் தொடராமல் இருக்க வேண்டும்.




திருமதி.ஆர்.ஜெயலட்சுமி


  மரு.நிருபா அவர்கள் சந்தன மாலை அணிவித்தார்

 மரு.மணிமேகலை அவர்கள் பொன்னாடை போர்த்தினார்

 வட்டார மருத்துவ அலுவலர் மரு.சாபிரபாகரன் மற்றும் சேப்ளாபட்டி ஆ.சு.நி. மருத்துவ அலுவலர் திரு.சுதாகர் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினார்கள்.


 தோழிகளுடன்

 மரு.சுதாகர் அவர்களின் வாழ்த்துரை


 டி.கிறிஸ்டி கி.சு.செ அவர்கள் வாழ்த்துக் கவிதை வாசித்தார்


 விழாவில் கலந்து கொண்டோர்


 கண்மருத்துவ உதவியாளர் திரு.சி.செல்வமோககுமாருடன்

 கண்காணிப்பாளர்.சே.வேங்கடசுரமணியன் நன்றியுரை

மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு.மனோகரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு.முத்தையனுடன்.

1 comment:

Rathnavel Natarajan said...

எங்கள் மனப்பூர்வ வாழ்த்துகள்.