06 December 2011

ஒரு டாக்டரின் டயரியிலிருந்து

                     பொதுவாக பத்திரிகைகளில் வெளிவரும் டாக்டர்கள் பற்றிய ஜோக் நிறைய படித்திருக்கிறேன்.நர்ஸ்ஸுடன் சரசமாடுவது,நோயாளிகளிடம் அதிக ஃபீஸ் வாங்குவது,ஆப்பரேஷன் சக்சஸ் ஆகாமல் நோயாளியை சாகடிப்பது,மருந்தை மாற்றிக் கொடுப்பது,கவனக்குறைவு ஆப்பரேஷன்,என இவைகள் இருக்கும.

உதாரணமாக,

”நோயாளி:  நான் பிழைக்கிறதுக்கு ஏதும் வழி இருக்கா?
உறவினர்:  ஒரு வழிதான் இருக்கு. இந்த ஹாஸ்பிட்டளோட பின் வழி. எந்திருச்சு ஓடி போயிடு.. பிழைசுக்குவே..”
                                 
நோயாளி„ டாக்டர் குருட்டு அதிர்ஷ்டம்னா என்ன?
 டாக்டர்„  நான் ஆபரேஷன் செய்தும் என் முன்னால் உட்கார்ந்து பேசறீங்களே அதான்

நோயாளி„ ஆபரேஷன் பண்றப்ப பாதியில் கரண்டு போயிட்டா என்ன டாக்டர் பண்ணுவீங்க?

 டாக்டர்„ அதை அந்த நர்சிடம் கேளுங்க...?

 நர்ஸ்„ போங்க டாக்டர்* எனக்கு வெட்கமா இருக்கு.. 

நோயாளி„ ?.....?......?.....? 

இப்படியாக எல்லாவற்றிலுமே  கோமாளிகளாகவும்,பணத்தாசை கொண்டவர்களாகவும்,காமுகனாகவும், டாக்டர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள்.மனிதர்களின் கடைசிக்கு முந்தைய நம்பிக்கை டாக்டர்கள் தான் என்றாலும் இத்தகைய ஜோக்குகள் காலம் காலமாக பல்வேறு மொழிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இது ஒரு அழகியல் முரண்.

                உண்மையில் டாக்டர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல்வேறு நகைச்சுவைகளை ஆவணப்படுத்தினால் கணக்கிலட்ங்காது.ஒவ்வொரு நாளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காணும் நகைச்சுவைகள் எண்ணற்றவை.”கார்டூனிஸ்ட் மதனின் “முன்னெசரிக்கை முத்தண்னா” “ரெட்டைவால் ரெங்குடு” போன்ற பல கேரக்டர்களை டாக்டர்கள் தினமும் சந்தித்து வருகிறார்கள்.அதை பற்றி பேசவோ,பதியவோ அவர்கள் முனைவதுமில்லை ஒருசிலரைத்தவிர.பெரும்பாலும் நோயாளிகளின்அறியாமைதான் இதன் முக்கிய கருவாக இருக்கும். அதனால் இதனை பதிவு செய்வதென்பது கேலி செய்வதாகிவிடுமோ என்ற அச்சமும் இருக்கும். மேலும் நோயாளிகளின் அந்தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகி விடுகிறது.இதர்கெல்லாம் மேலாக அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

ஆனால் மாறாக சமீபத்தில் டாக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களின் ”ஒரு டாக்டரின் டைரியிலிருந்து” மென் நூல் இணையத்தில் படிக்கக் கிடைத்தது.ஒரு டாக்டரின் அனுபவங்கள் அற்புதமாக பதிவு செய்யப்படுள்ள நூல் இது.இவர் ஈழத்தை சேர்ந்த இவரது ஒவ்வொரு கட்டுரையிலும் (பத்தி) நகைச்சுவை கொப்பளிக்கிறது.எதுவும் வலிந்து ஏழுதப்படவில்லை.மிக எதார்த்தமான பதிவுகள் அவை.நகைச்சுவையினூடாக ஈழத்தின் அவலம், மருத்துவத் தொழிலில் சந்திக்கக் கூடிய அபத்தங்கள் ஆகியவைகள் நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக....
               ஈழத்தில் போர்க்காலங்களில் இவர் புலம் பெயறாமல் மக்களோடு இருந்து சேவை செய்திருக்கிறார்.அதை அவர் பெருமையாக்வும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.”
             ஆனால் நோயாளி இன்னொருவருடன் பேசிக்கொள்கிறார் ”கெட்டிக்கார டாக்டர்மார்லாம் நல்ல வேலை எடுத்துக் கொண்டு வெளியே போட்டினம்.இஞ்சை மிஞ்சி இருப்பவர்களுக்கு கெட்டிக்காரத்தன்ம் காணாது எண்டு போல” - எப்படி?..இதன் தலைப்பு ”வெளிநாட்டிற்கு ஓடித் தப்பலாமா?” 

இன்னொரு கட்டுரையில் டாக்டர்கள் கல்யாணவீடுகளில் சந்திக்கிற நிகழ்வுகள் பற்றிய குறிப்பு வருகிறது ..நல்லது கெட்டது எனப்பாராமல் டாக்டரை பார்த்தவுடன் நோவுபற்றியே பேசும் மனிதர்களை சுட்டுகிறார்.கொடுமையாக குழந்தைகளிடம் கூட “டாக்டர் மாமா ஊசிபோட்டுவார்” என டாக்டர்களை பூச்சாண்டியாக்குவர்களை வேடிக்கையாக இவர் குறிப்பிட்டாலும் அதன் பின்னுள்ள வேதனை உணரமுடிகிறது.

ஒரு ஞாவிறு மாலைப்பொழுதை கூறத்துவங்கும் இவர் இப்படி சொல்கிறார் “ அது ஓர் அமைதியான ஞாயிறு மாலை! ( ஆச்சிரியக் குறி கவனத்தில் கொள்ள வேண்டும்) குண்டடிப்புச் சத்தங்களும் ஷெல்களின் ஓசைகளும் ஹெலியின் வட்டமிடல்களும் கேட்காத அந்திமாலைப் பொழுது” என்கிறார்.ஈழத்தின் களேபரம் படிப்பவர் கண்களில் நிறைகிற்து.

”மருந்து கட்டாவிட்டால் சிறிய காயம் என கொமிட்டிக்காரர் லீவு தரமாட்டினம்.அடிக்கடி கோயில் பூசைக்கு குளிப்பது சிரமமாக இருக்கும்” என்கிற கோயில் அய்யமாருக்கு சிறிய காயத்திற்கு பெரிய கட்டுகட்டி விடநேர்கிறது டாக்டருக்கு.

வயது போனவர்கள் தானே என அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யாத உறவுகளை விமரிசிக்கிறார்.

போனவரியம் இளையவள் ஷெல் அடிச்சு என்ரை கண்முன்னாலே துசிச்சு செத்துப்போனாள்........மூத்தவன் போனமாதம் ஹெலி சுட்டு சன்னம் வயித்தில பட்டு பத்துநாளா ஆஸ்பத்திரியில் கிடந்து அவனும் போட்டான்......என கூறி ஏற்கனவே செய்த குடும்பக் கட்டுபாட்டு ஆப்பரேஷனை மாற்று ஆபரேஷன் செய்ய முடியுமா என கதறும் தகப்பனை படிக்கும் போது “ விதியே விதியே என் செய்ய நினைத்தாய் எம் தமிழ்ச்சாதியை”  என கண்கள் கலங்குகிறது.

”உன்னுடை பரம்பரை மாத்திரமல்ல ,எங்கடை தமிழ்ச்சமுதாயமே அழிஞ்சி போகாமால் இருக்க வேணும் என்றால் , இனி இங்கே ஒரு கருத்தடை ஆப்பரேஷன் கூட நடக்கக் கூடாது” என எண்ணிக்கொண்டேன் என முடிக்கிறார் அக்கட்டுரையை.

போரும்,அடக்குமுறையும் குதறிப்போட்ட உயிருக்கு உத்தரவாதமில்லாத ஒரு சமூகத்தில் குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷன் அபத்தமாகத்தான் படுகிறது.இந்தக் கட்டுரையில் இது பல்வேறு பாத்திரங்கள் வாயிலாக விவாதம் நம்மை அடைகிறது.நல்ல உத்தி.

இன்னொரு கட்டுரையில் மண்ணெண்னைகடையில் கூட மருந்து விற்கிறார்கள் என்கிறார்.மருந்து வியாபாரிகளிடமிருந்து தமிழ் மக்களை காக்க க்டவுளாலும் முடியுமா என கேட்கிறார்.

இந்தக்கடுரைகள் 1986 -87 களில் எழிதப்பட்டு சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்டவை, டொமெனிக்ஜீவா முகவுரை எழுதியுள்ளார்.மருத்துவத் துறை தாண்டிய ஒரு அற்புதப் படைப்பு இது.

இவரது வலைப்பூ

இது போல இன்ன பிற டாக்டர்களின் அனுபவப்பதிவுகள்

மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

டாக்டர் சுரேஷ்


புத்தகம் டவுன்லோட் செய்ய




ஒரு டாக்டரின் டயரியிலிருந்து





  



1 comment:

Muruganandan M.K. said...

மிக்க நன்றி.
எனது நூலை இரசித்தது மட்டுமின்றி நல்ல முறையில் அறிமுகப்படுத்திதற்கும்.