11 December 2011

2004க்கு பின் போலியோ பாதிப்பு இல்லை


தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு, 11.12.2011 இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், "பல்ஸ் போலி யோ சிறப்பு முகாம்'கள் நடத்தப்பட்டு, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முறையான தவணைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால், 2004க்கு பின் போலியோ நோயால் எந்த குழந்தையும் பாதிக்கப் படவில்லை.

இருந்த போதிலும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலை தேடி வருவோரின் குழந்தைகள் மூலம் இந்த நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.இவ்வாறு, அடிக்கடி இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தை களுக்கு சரியான தவணைகளில் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில்லை.இதை கருத்தில் கொண்டு,இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியை உருவாக்குவதற்காக, 11.12.2011 அன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க, தமிழகம் முழுவதும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி,
கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம்,
மேம்பாலம்,
தொழிற்சாலை,
நெடுஞ்சாலை,
ரயில்வே பணி கள்,
செங்கல்சூளை,
நரிக்குறவர் தங்குமிடம்,
வேளாண் தொழிலாளர்கள் வசிப்பிடம்,
மீனவ பகுதி,
சாலையோர குடியிருப் புகள்,
 இலங்கை அகதிகள்
ஆகியோருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

No comments: