27 August 2011

கடவுளை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?

31.08.11 ஆனந்தவிகடனின் இணைப்பிதழான என்விகடன் ( திருச்சி,தஞ்சை,கரூர் பதிப்பு) இதழில் ஒரு கேள்வி பலரிடம் கேட்கப்பட்டு அதற்கான பதில் பெறப்பட்டு பிரசுரமாகியுள்ளது.

                         ( படத்தை கிளிக் செய்து செய்தியை படியுங்கள்)


கேள்வி:கடவுளை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?
பதில் :( மலர்ச்செல்வி ஆசிரியை கும்பகோணம்)
“சமீபத்தில் எங்க பள்ளிகூடத்துக்கு பார்வைப் பரிசோதனைக்கு வந்த மருத்துவர்கள் எல்லாம் ரொம்ப அர்ப்பணிப்பா வேலை பார்த்தாங்க.எங்களைப்போல ஆசிரியர்களுக்கும் பிள்ளைங்க கிட்ட உள்ள பார்வை குறைபாடுகளை எப்படி கண்டுபிடிக்கறதுன்னு சொல்லித்தந்தாங்க.அதனால் நிறைய பசங்களோட பிரச்சனைகளைக் கண்டுபிடிச்சு பெற்றோர்கிட்ட தெரியப்படுத்தினோம்.இந்த மாதிரியே எல்லா மருத்துவர்களும் இருந்தா நம்ம நாடு எவ்வளவு சுகாதாரமா இருக்கும்கிற எண்ணத்தை அவங்க உருவாக்கிட்டாங்க.மருத்துவத்தைத் தொழிலாகப் பார்க்காமல் சேவையாகப் பார்க்குற மனசு உள்ள நிறையபேர் மருத்துவத்துறைக்கு வரணும்னு கடவுள் கிட்ட நான் கேட்பேன்”
இது பொதுசுகாதாரத்துறையின் சாதனை என்றே சொல்லவேண்டும்.மனமாற வாழ்த்திய ஆசிரியைக்கும் மனங்குளிர பணியாற்றிய கும்பகோணம் கண்மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்கள்

No comments: