27 October 2010

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பணி ஓய்வு









தோகமலை சமுதாய நல நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி 30.09.2010 அன்று வயது முதிர்வின்காரணமாக பணி ஓய்வு பெற்ற பெரியவர் திரு.இ.ராஜலிங்கம் அவர்களுக்கு தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. வட்டார அளவில் அணைத்து ம்ருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வயதில் தான் இவர் பெரியவர் பணியில் இளைஞர் தான்.ஓய்வு பெறும் வயதில் கூட சுறுசுறுப்பும் பொறுப்புணர்வும் கொண்டு பணிபுரிந்தவர்.இவரது பெருமைகளை அனைவரும் பேசினர்.இவரது மனைவியும் இவருடன் கவுரவிக்கப்பட்டார்கள். திரு.இ.ராஜலிங்கம் அவர்கள்அனைவருக்கும் சிறப்பான விருந்து படைத்தார்.பிறகு அலுவலக சகோதர சகோதரிகள் படை சூழ அவரது சொந்த ஊரான தரகம்பட்டிக்கு அவரை கொண்டுவிட்டு பிரியாவிடைபெற்றுத் திரும்பினோம்.

No comments: