23 October 2010

அக்டோபர் 20 உலக புள்ளியியல் தினம்

ஐக்கிய நாடுகள் பொது சபை. அக்டோபர் 20-ம் தேதியை உலக புள்ளியியல் தினமாக அறிவித்துள்ளது. புள்ளி விவரங்களின் பயன்பாட்டின் வெற்றியையும், அவற்றின் சேவை, மேன்மை மற்றும் தொழில் திறமையையும் கொண்டாடுவதே இத்தினத்தின் பொது நோக்கமாகும்.

ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் இப்புள்ளி விவரங்களைச் சார்ந்தே உள்ளன. பல்வேறு அரசுத் துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலை புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இப்புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களுக்கு இத்தினத்தில் பாராட்டுக்களை தெரிவிப்போம்.

கரூர் மாவட்ட உதவி இயக்குனர் திரு.ஈஸ்வரன் அவர்களின் சலியாத உழைப்பும்,சமரசம் செய்துகொள்ளாத பணி நேர்மையும் இங்கு நினைவு கூர்ந்து பாராட்டத்தக்கது.

4 comments:

புருனோ Bruno said...

There are three kinds of lies

Lies
Damn Lies
Statistics

ஹி ஹி ஹி

சே.வேங்கடசுப்ரமணியன் said...

அரசில் இதெல்லாம் சாதாரணமப்பா.........ஹி..ஹி...ஹி

ராம்ஜி_யாஹூ said...

thanks for the info, but no board, banner, notice near channai statistics institute in taramani

சே.வேங்கடசுப்ரமணியன் said...

ராம்ஜி சார் பதும் இப்படித்தான். பள்ளிக்கூடங்கள் இல்லை என்றால் சுதந்திர நினத்திற்கும் இந்த நிலை தான்.