07 October 2008

தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு கலைக்குழு

இன்று தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டுஒரு கலைக்குழு ஆ.சு.நி.க்கு வந்திருந்தது.தொழுநோய் பற்றிய பல தகவல் களை மிக யதார்தமாக ஒரே ஒரு மைக் வைத்து கொண்டு பர்வையாளர்களை தங்கள் பக்கம் கவர்ந்து கவனிக்கச் செய்துவிடும் லாவகம் அபாரம்.கணவன் மனைவி பாத்திரஙளை ஏற்று நடித்த இருவரும் நடிக்க வில்லை. ஆனால் ஒலிபெருக்கியில் பேசும்போது நடிப்பது போனற ஒரு நளினம்.கிட்ட தட்ட டப்பிங் கலை.உடலில் ஏற்படும் தேமல்கள் பற்றி பொது மக்களிடம் ஊள்ள அறியாமை என்ன என்பதை (எச்சிதழும்பு,அதிர்ஷ்டதழும்பு) நகைச்சுவயுடன்விள‌க்கியதோடு . அறிகுறி உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன, யாரை தொடர்பு கொள்ள வேண்டும், போன்ற பல தகவல்களை அற்புதமான எற்ற இறக்க வசனங்களுடன் நடித்த பாங்கு நன்றாய் யிருந்தது.நிகழ்சி ஏற்பாடுகளை திரு.டி.ஜெயராமன் என்.எம்.ஸ். அவர்கள் செய்திருந்தார்.மருத்துவ அலுவலர்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,சமூக சுகாதார செவிலி,கண்காணிப்பளர் ஆகியோர் ந்கழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments: